மிக கொடிய மிருகம்
உலக வாழ்க்கையில் எந்த "இரை"யும் இந்தா என்னை புசித்து உன் பசி போக்கி கொள் என்று சொல்வதில்லை. மிருகம் தன் பசியை தவிர வேறு எதற்கும் பெரிய அளவிலான போராட்டம் செய்வதில்லை. மனிதனின் போராட்டம் இரை மட்டுமல்ல பொருள், பெருமை, வசதி, அந்தஸ்து என பலவகையில் போராட்டம் உள்ளது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறான். இல்லாதவனை இருப்பவன் ஏய்க்கிறான் அது வியாபாரமாகி போனது. ஏழைக்கு எட்டா கனியானது கல்வி. காசை கொட்டி படிக்க வைத்தால் மட்டும் போதும் மாதசம்பளம் பல லகரத்தில் கிடைக்க கல்லூரி கூடங்கள் உத்திரவாதம் அளிக்கிறது. நல்லதை சொல்லி திருத்த வேண்டிய பொழுதுபோக்கு அம்சம் குப்பைகளை அள்ளி வீசுகிறது. குப்பை ஆனது மனிதமனம் மட்டுமல்ல சுற்றுச்சூழலும் தான். குடி போதை வஸ்துகளை நியாயப்படுத்தி, எவன் குடி எப்படி கெட்டால் எனக்கென்ன என்று கல்லா கட்டி, ஊற்றி கொடுக்கும் பெருங்கூட்டமே உள்ளது. இறைவன் படைப்பில் மிக கொடிய மிருகமாக மனிதன் மாறுபட்டுதான் இருக்கிறான். முன்பொரு காலத்தில்.... ...