பெண் இனத்தில் உள்ள பெருமைகளை போற்ற வேண்டும்
மாமியார் மருமகள் உறவை வைத்து எத்தனை சீரியல்கள் எடுத்தாலும் எதிலும் நல்ல உறவுமுறை காட்டபடுவதில்லை. நடைமுறையில், ஒரு மகன் தனது தாயின் உடற்ப்பினி மோசமான நிலையில் வேதனை உற்று தவிக்கிறான். தன்னால் முடிந்த அனைத்து சேவைகளும் செய்கிறான் உதவிக்கு தனது மனைவியை அழைக்கிறான். எவ்வித தயக்கமும் இன்றி தனது அத்தைக்கு மகளாக மாறுகிறாள். இயற்கை உபாதை ஏற்படுகிறது , உடன் அருகில் நின்று அதற்குரிய உதவி புரிகிறாள் . அந்த பெண்மைக்கு தலைவணங்கி போற்ற படவேண்டும். அதனால்தான் அந்த உறவுக்கு மறு'மகள்' என பெயர் வைத்தார்கள் போலும். பெண்ணின் தாய்மை உணர்ச்சிக்கு எத்தனையோ உவமானங்கள், பெருமைகள் இருக்கிறது. சதுரங்க விளையாட்டில் கூட ஒரு சிப்பாய் கஷ்டப்பட்டு ஏழு கட்டம் தாண்டி எட்டாவது கட்டத்தில் யானை,குதிரை,மந்திரி என மாற வாய்ப்பு பெற்றாலும் பெறும்பாலும் ராணியாக மாற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்று முடிப்பார்கள். ராஜாவை காப்பாற்ற இன்னொரு ராஜா வருவதில்லை சதுரங்கத்தில். அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி, அண்ணன்,அக்கா,தம்பி, தங்கை இப...

Comments
Post a Comment